search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வராக ஸ்லோகம்"

    கீழே கொடுக்கப்பட்டுள்ள வராக மந்திரத்தை கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் படித்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
    ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
    கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
    தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
    தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

    பொருள் : சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளி படைத்தவரே, வராக மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராகமூர்த்தியே நமஸ்காரம்.

    இந்த வராக மந்திரத்தை கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் படிக்கலாம்.
    ×